- மாவட்ட கூடைப்பந்து கிளப்
- திருப்பூர்
- திருப்பூர் மாவட்ட கூடைப்பந்து கழகம்
- மாவட்ட கூடைப்பந்து சங்கம்
- தின மலர்
திருப்பூர், அக்.4: திருப்பூர் மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் சார்பில், கூடைப்பந்து விளையாட்டு நடுவர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு, திருப்பூர் மாவட்ட கூடைப்பந்து கழக தலைவர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். திருப்பூர் மாவட்ட கூடைப்பந்துக் கழகத்தின் இணைச் செயலாளரும், தலைமைப் பயிற்சியாளருமான ஸ்ரீராம் அனைவரையும் வரவேற்றார்.
கோவையை சேர்ந்த தேசிய கூடைப்பந்து நடுவரும், பயிற்றுநருமான அஜய் லாரன்ஸ் கூடைப்பந்து விளையாட்டின் புதிய விதிகள், அடிப்படை நுணுக்கங்கள், தொழில்நுட்ப பயிற்சிகள், உடற்திறன் மற்றும் ஆயத்த பயிற்சிகள், தீர்ப்புகளை கையாளுதல், போட்டியின்போது மற்ற நடுவர்களுடனான கலந்தாய்வு குறித்த பல்வேறு பயிற்சிகள் மற்றும் நுணுக்கங்களை வகுப்பறையிலும், மைதானத்திலும் நேரிடையாக அளித்தார். சுமார் 20க்கும் மேற்பட்ட உடற்கல்வி ஆசிரிய, ஆசிரியைகள், மூத்த விளையாட்டு வீரர்கள் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர். திருப்பூர் மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் சார்பில் அனைவருக்கும் மதிய உணவு மற்றும் பயிற்சி வகுப்பிற்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது.
The post மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் நடுவர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் appeared first on Dinakaran.